திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு - 45,885 பேர் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு. 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது, கண்காணிப்பு மற்றும் அதிகாரிகள் மொபைல் டீம், பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடக்கிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வை, 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காலை 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது என்பதால், தேர்வாளர்கள் 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அனுமதிப்பதற்கு முன்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் உடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்த பின்னரே தேர்வு மையத்திற்கு பட்டனர். ஒன்பது 30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு எழுத துவங்கினர்.



தேர்வுமைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...