சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோட்டில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இரண்டு பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் கடந்த 18-ந் தேதி உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிந்தார். 

பின்னர் அவர் மே.24 மாலை 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது அங்கு பீரோவில் இருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் என 2 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. 

பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் மே.24 சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...