சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோட்டில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இரண்டு பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் கடந்த 18-ந் தேதி உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிந்தார். 

பின்னர் அவர் மே.24 மாலை 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது அங்கு பீரோவில் இருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் என 2 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. 

பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் மே.24 சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...