கோவையில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருடிய பெண் கைது

கோவையில் மயக்க மருந்து கொடுத்து 65 வயது மூதாட்டியிடம் இருந்து 20 பவுன் நகை திருடி விட்டு தப்பிய பெண்ணை போலீஸ் கைது செய்தனர். திருடிய நகையும் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி (வயது 55) என்பவரும் வந்தார். 

அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோயில் வளாகத்தில் படுத்து தூங்கினர். அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை வள்ளி கூறியதன் பேரில் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வள்ளியையும், நகை வைத்திருந்த பையையும் காணவில்லை.

பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்த வள்ளியை நேற்று மே.23 கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

அவர் ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடி உள்ளார் .அதோடு சென்னை, காஞ்சிபுரத்திலும் கைவரிசை காட்டியுள்ளார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன் அவருக்கு பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...