டாஸ்மாக் கடை மூடலால் வேலையிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீதிமன்ற தீர்ப்பை தொடந்து தமிழகத்தில் 3339 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேளை இழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க கோரி மனு அளித்தனர்.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்குகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆனால் கடை சாவிகளை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்கமறுப்பதாகவும், இதனால் கடைகளில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...