டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீட்டை சுற்றி பொதுமக்கள் தூய்மையாக வைக்குமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

பொது மக்கள் தம் வீடுகள்,கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையரின் அன்பான வேண்டுகோள், தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது.

மேலும், பொது மக்கள் அவர் தம் வீடுகள்/கட்டுமான இடங்கள்/வணிக வளாகங்கள்/பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும். , வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வீட்டு கூரைகளில் டையர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்புபணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழுஒத்துழைப்பு நல்கவேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்படின் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...