உடுமலை அருகே அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மோட்டார் வைத்து தொழிலதிபர்கள் திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோக தென்னை, வாழை, கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் ஆயிரம் கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.



இதற்கு இடையில் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கு மோட்டார் வைத்து திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுனர்.



பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தண்ணீர் திருடும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிப்பதாகவும், உடனடியாக அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக பதிக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மின்மோட்டார்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தபட்டது.

இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு நாளை மறுநாள் அமராவதி அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...