ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் குடும்பமாக உறங்கும் வீடியோ வைரல்

அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.



இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...