கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம், பலத்த காற்றுக்குப் பின், சாய்ந்து விழுந்தது.



Coimbatore: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் வீசிய காற்றின் காரணமாக சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அரச மரத்தின் அடியில் இளைப்பாறுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.15) மாலை காற்று வீசியபோது சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. சாலையில் குறுக்கே விழுந்தது. 

அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சரத்தை துண்டித்தனர். பின்னர் விரைந்து வந்து வருவாய் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். 

ஊர் மக்களின் அடையாளமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...