கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம், பலத்த காற்றுக்குப் பின், சாய்ந்து விழுந்தது.



Coimbatore: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் வீசிய காற்றின் காரணமாக சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அரச மரத்தின் அடியில் இளைப்பாறுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.15) மாலை காற்று வீசியபோது சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. சாலையில் குறுக்கே விழுந்தது. 

அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சரத்தை துண்டித்தனர். பின்னர் விரைந்து வந்து வருவாய் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். 

ஊர் மக்களின் அடையாளமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...