தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேர் கைது

மே 15, கோவையில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய அருகே உயர் ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாக ரகசிய தகவல். சோதனையில் 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டெடுப்பு; 6 பேர் கைது.


Coimbatore:

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதைப் பொருள் விற்பனை செய்யும் சம்பவம் இன்று (மே 15) கண்டறியப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி, சிறப்பு காவல் படை தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தியது. அங்கு 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40), இத்ரிஷ் அலி மனைவி ஜஹீரா கா துன்(29), எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29), அலிஹீசைன் மனைவிகுதிஜா கா துன்(37), மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து ரூபாய் 2,10,000 மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1,900 பிளாஸ்டிக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...