உடுமலையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் 250 கிலோ பறிமுதல்

உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் நடத்திய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்திரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படியும் உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் உடுமலை நகரப் பகுதியில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது மாம்பழம் மொத்தமாக மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளில் மாம்பழங்கள் செயற்கையாக ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ எடையுள்ள அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.



கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்ணும் பழமாக மாம்பழம் இருப்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.



மேலும் ரசாயன முறையில் செயற்கையாக மாம்பழங்களை பழக்க வைத்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...