உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் காவல் ஆய்வாளரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

பாலியல் வழக்கு தொடர்பான தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியதாக பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12-ம் தேதி 17 வயது சிறுமி தொடர்பான பாலியல் வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சில இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த செயலை கண்டித்து உடுமலை அனைத்து பத்திரிகையாளர்களும் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை DSP சுகுமாரன், குடிமங்கலம் ஆய்வாளர் கீதா, பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை கொடுக்கவும், மரியாதையாக நடத்தவும் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். உடுமலை மகளிர் காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...