பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை உலா - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை சாலை பகுதியில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து, பின்னர் வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் தாக்கம் முடிந்து வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடங்கியுள்ளது.

இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை சாலை பகுதியில் நேற்று மே.13 வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த பயணி இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...