பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை உலா - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை சாலை பகுதியில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து, பின்னர் வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் தாக்கம் முடிந்து வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடங்கியுள்ளது.

இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை சாலை பகுதியில் நேற்று மே.13 வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த பயணி இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...