உடுமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது

தாத்தா பாட்டியுடன் வசித்த வந்த 17வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடன் உடுமலை பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு நபர்கள் பாலியல் தொடர்பில் இருந்து உள்ளனர். இதில் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பாட்டி விசாரித்த போது, இது குறித்து சிறுமி தெரிவித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் காளீஸ்வரன்(19), மதன்குமார்(19), பரணிகுமார்(21), பிரகாஷ்(24), நந்தகோபால்(19), பவா பாரதி(22) மற்றும் 14,15,16 ஆகிய வயது சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...