கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.



இந்த சிறப்பு முகாமானது மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



இதில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.



இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...