உடுமலை கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!

சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கோடத்தூர் மலைவாழ் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்பொழுது பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும் விரிசல் அடைந்தும் காணப்படுகின்றது.

இதனால் மழை வெயில் காலங்களில் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்கு பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், அவசர தேவைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் கோடந்தூர் மலைவாழ் கிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்களிடமும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு கோடந்தூர் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...