அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி - கோவையில் முன்னாள் சர்வேயர் கைது

முருகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.77 லட்சம் வரை மோசடி செய்த நில அளவையர் கலைசங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை முருகன் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த கலைசங்கர் (36) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

முருகன் தனது மகன் கார்த்திக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கலைசங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவர் நன்றாக தெரியும். எனவே அவரிடம் பேசி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மை என நம்பிய முருகன், தனது மகனுக்கு மற்றும் அவருக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர கலை சங்கரிடம் கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார். முருகனிடம் அரசு முத்திரையுடன் கூடிய ஜுனியர் உதவியாளர் பணி உள்ளிட்ட பணிக்கான நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். இதற்கிடையே முருகன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே அவரது மகன் கார்த்திக் இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கலைசங்கர் (36) மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (10-05-2024) அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...