கோவையில் பருவமழையை எதிர்பார்க்காமல் வந்த பெலிகன் பறவைகள்!

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு வகையான பறவைகள் தமிழகத்திற்கு வருகின்றன.



இவை தவிர, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து வரும் பறவைகளில் அதிக எடை கொண்ட பெலிகன் பறவைகளே அதிகம். கோவைப் பகுதியில் உள்ள சிங்காநல்லூர் குளம், பேரூர் குளம், முத்தணன் குளம், குறிச்சிக் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்களைத் தேடி பெலிகன், ஸ்பூன் பில், நாதன்சாளர், டார்டர், பெயிண்டட் ஸ்டார்க், பென்டைல் டக் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளது. 



இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவ மழை சரியாக பெய்யாததால் கோவையில் உள்ள பல்வேறு குளங்களில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பெலிகன் பறவைகள் வழக்கம் போல் இந்த ஆண்டும் வந்துள்ளது.

கோவையில் உள்ள குளங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ள பெலிகன் பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...