கோவையில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்புக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19-30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா கோவில், மெக்ரிகர் சாலை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும். மாத 20 ரூபாய் வழங்கப்படும். அதேபோல், டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 24 - 35 வயதிற்குள்ளும், 162.5 செ.மீ., உயரத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள நேர் ஊதியமாக 16 ஆயிரத்து காணல், சாலை விதிகள் தொடர்பான தேர்வு, கண் பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். மாத ஊதியமாக 15 ஆயிரத்து 820 ரூபாய் வழங்கப்படும்.

நேர்முக தேர்வுக்கு வருவோர் அசல் மற்றும் நகல் கல்வித் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...