பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (மே.8) இரவு மழை பெய்தது. இதனால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இந்த தண்ணீர் வெளியேற போதுமான வழியில்லை. இதனால் இன்று (மே.9) இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தின் மேல் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...