கோவை மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி, குண்டத்தில் மல்லிகை மலர்ச் செண்டை வீசி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, அக்னி கம்பம் நடுதல், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், குண்டம் திறத்தல், நகைப்பெட்டி எடுத்து வருதல், அக்னி வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (மே.8) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சியையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய வண்ணம் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.



அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி கையில் வேல் எடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி பயபக்தியுடன் அம்மனை மனதில் நினைத்து குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சுரேஷ் கோலக் கூடை எடுத்தும், மனோஜ் சக்தி கரகம் எடுத்தும், சுதர்சன் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...