கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு

கோடை வெப்பத்தின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.


கோவை: கோவை, ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு, அரிசிபாளையம் கிராமத்தில் 2.5.24 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மேலும் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் தலைமைதாங்கினார். ஊர்பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவதை கல்லூரியின் முதல்வர் மோகன் தொடங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் பார்ம். டி மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

கோடை வெப்பத்தின் கடும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி ஊர்பொதுமக்களுக்கு மாணவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விளக்கமளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...