கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு

கோடை வெப்பத்தின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.


கோவை: கோவை, ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு, அரிசிபாளையம் கிராமத்தில் 2.5.24 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மேலும் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் தலைமைதாங்கினார். ஊர்பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவதை கல்லூரியின் முதல்வர் மோகன் தொடங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் பார்ம். டி மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

கோடை வெப்பத்தின் கடும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி ஊர்பொதுமக்களுக்கு மாணவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விளக்கமளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...