கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு

கோடை வெப்பத்தின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.


கோவை: கோவை, ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு, அரிசிபாளையம் கிராமத்தில் 2.5.24 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மேலும் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் தலைமைதாங்கினார். ஊர்பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவதை கல்லூரியின் முதல்வர் மோகன் தொடங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் பார்ம். டி மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

கோடை வெப்பத்தின் கடும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி ஊர்பொதுமக்களுக்கு மாணவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விளக்கமளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...