மாங்கரை ஓடைப் பகுதியில் யானை உயிரிழப்பு - காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் நுரையீரல் பாதிப்பால் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நுரையீரல் பாதிப்பால், மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்து யானை உயிரிழந்துள்ளது.


கோவை: கோவை வனத்துறையினர் நேற்று மே.7 காலை மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் அருகே உள்ள மாங்கரை சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதிக்கு வெளியே வனப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வனத்திற்குள் இருந்து வருகின்ற மாங்கரை ஓடை பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த யானையின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், யானை நுரையீரல் நோயால் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "உயிரிழந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

யானையின் நுரையீரல் பாதிப்பால், அதன் மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்ததில் யானை உயிரிழந்துள்ளது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...