கோவை மத்தியசிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி..!

கோவை மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகள் கல்வி மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை மத்தியசிறையில் தற்போது சுமார் 2300 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான யோகா, கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 கல்வியாண்டில் 12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தண்டனை சிறைவாசிகள் சுப்புராஜ், மன்சூர் அகமது மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை பெற்று தலைசிறந்த தேர்வு முடிவுகளை பதிவு செய்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ம். செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறியுள்ளார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...