தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியினை பயில்வதற்கு உதவும் வகையில் கல்வித்தொகை வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.


கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை (தமிழ் வழிக் கல்வி) பாட பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு "வேளாண்மை தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், எண்டோவ்மென்ட்” - கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள துணைவேந்தர் அறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, முனைவர் N.வெங்கடேச பழனிச்சாமி முதன்மையர் (வேளாண்மை), முனைவர் T.N.பாலமோகன் முதன்மையர் (தோட்டக்கலை) (ஓய்வு), P.T. கலைசெல்வன், துணை பொது மேலாளர், கனரா வங்கி (ஓய்வு), V. நடேசன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஓய்வு), V. இரங்கநாதன், முதன்மை மேலாளர், கனரா வங்கி (ஓய்வு) மற்றும் M. G. முகமது இக்பால், கூடுதல் வேளாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு (ஓய்வு) ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

முதன்மையர் (வேளாண்மை), முனைவர் N. வெங்கடேச பழனிச்சாமி, தனது வாழ்த்துரையில் கடந்த ஆண்டு ரூ.6,40,000/- வேளாண்மை - தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டது எனவும், இத்தொகையில் ரூ.40,000/- கடந்த ஆண்டு (2022-2023) இளம் அறிவியல் மற்றும் தோட்டக்கலை பயிலும் மாணவிகளுக்கு தலா ரூ.20,000/- வழங்கப்பட்டது எனவும் கூறினார். மேலும் மீதமுள்ள ரூ.6,00,000/- தொகையை நிலையான வைப்பு (Fixed Deposit) வைக்கப்பட்டு இதன்மூலம் பெறப்பட்ட வட்டித்தொகையான ரூ.43,500/- யை இந்த ஆண்டு (2023-2024) இளம் அறிவியியல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

முன்னாள் முதன்மையர் (தோட்டக்கலை) முனைவர் T.N.பாலமோகன் (ஓய்வு), தனது உரையில், 1977-81 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயின்ற சக மாணவர்கள் குழுவாக இணைந்து, கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் மேலும் இதுபோன்ற உதவிகளை மற்றவர்கள் செய்யவேண்டும் என்பதற்காகவும் இம்மாதிரி கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறினார்.

மேலும் இந்த கல்வித்தொகை விருதை பெறும் இளம் அறிவியல் மற்றும் தோட்டக்கலை மாணவிகள் இருவர் தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமிதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கல்வி உதவித் தொகை ஒருங்கிணைப்பு மையமானது பொருளாதார ரீதியாக பின்தங்கிய, ஒற்றை பெற்றோர் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்போது வேளாண்மை தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், வழங்கும் கல்வி உதவித்தொகை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களது கல்வியினை பயில்வதற்கு உதவும் வகையில் இதுபோன்ற கல்வித்தொகை வழங்க முன்வரவேண்டும் எனவும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...