கடும் வெயிலால் கோவையில் இளநீர் விலை உயர்வு - ஒரு இளநீர் ரூ.45 விற்பனை

வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகின்றனர். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்று வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஜில்லென்று காற்று வீசும் குளுகுளு கோவையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கரும்பு ஜூஸ், கூல், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக்கூடிய பானங்களை பருகி வெப்பத்தை தனித்து வருகிறார்கள்.இந்த நிலையில், வெயிலுக்கு இளநீர் உகந்ததாக இருப்பதால் இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக கோவையில் இளநீர் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது (ஏப்ரல்.23) ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், கோவைக்கு பொதுவாக பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் இளநீர் விலை உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு இளநீரின் விலை ரூ.50-ஐ தொட்டு விடும் என்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...