உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

பறவைக்காவடி வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில் முக்கிய விழாவான வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடைப்பெறுகிறது. இந்த நிலையில் தேர்த்திருவிழாவைமுன்னிட்டு சபரிமலை ஸ்ரீ சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பில் பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தும் விழா, 9-ம் ஆண்டு பறவைக்காவடி தூக்க நேர்ச்சை உற்சவம், தேவராட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் ஆகியவை நடைப்பெற்றது.



உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை ஆதீனம் கூனம்பட்டி ராஜ சரவண சுவாமிகள் துவைக்க வைத்தார். மேலும் பறவைக்காவடி முன்பு பெண்கள் அலகு குத்தியும், 20க்கு மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ஒவ்வொரு கிரேன் வாகனத்திலும் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

இந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழைய பஸ் நிலையம், தளி சாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, கொல்லம்பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.இதில் அலகுகுத்தி வந்தவர்கள் அந்த வாகனங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு கைகளில் வாள் ஏந்தியபடி அங்குமிங்கும் ஆடியபடி வந்தனர். ஒரு வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி வந்தனர். இந்த நிகழ்ச்சியை, சாலையின் இரண்டு புறமும் திரளானவர்கள் நின்று பார்த்து பரவசம் அடைந்தனர். மேளதாளம் வாத்தியத்துடன் நடந்த இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.



இந்த பறவைக்காவடி ஊர்வலத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் தேவராட்டம் ஆடியும் சென்றனர். பறவை காவடிக்கான ஏற்பாடுகளை சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி பேரவை நிர்வாகிகள் ராஜன் மற்றும் அற்புதராஜ் உட்பட பலர் செய்தனர்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...