உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

பறவைக்காவடி வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில் முக்கிய விழாவான வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடைப்பெறுகிறது. இந்த நிலையில் தேர்த்திருவிழாவைமுன்னிட்டு சபரிமலை ஸ்ரீ சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பில் பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தும் விழா, 9-ம் ஆண்டு பறவைக்காவடி தூக்க நேர்ச்சை உற்சவம், தேவராட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் ஆகியவை நடைப்பெற்றது.



உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை ஆதீனம் கூனம்பட்டி ராஜ சரவண சுவாமிகள் துவைக்க வைத்தார். மேலும் பறவைக்காவடி முன்பு பெண்கள் அலகு குத்தியும், 20க்கு மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ஒவ்வொரு கிரேன் வாகனத்திலும் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

இந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழைய பஸ் நிலையம், தளி சாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, கொல்லம்பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.இதில் அலகுகுத்தி வந்தவர்கள் அந்த வாகனங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு கைகளில் வாள் ஏந்தியபடி அங்குமிங்கும் ஆடியபடி வந்தனர். ஒரு வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி வந்தனர். இந்த நிகழ்ச்சியை, சாலையின் இரண்டு புறமும் திரளானவர்கள் நின்று பார்த்து பரவசம் அடைந்தனர். மேளதாளம் வாத்தியத்துடன் நடந்த இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.



இந்த பறவைக்காவடி ஊர்வலத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் தேவராட்டம் ஆடியும் சென்றனர். பறவை காவடிக்கான ஏற்பாடுகளை சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி பேரவை நிர்வாகிகள் ராஜன் மற்றும் அற்புதராஜ் உட்பட பலர் செய்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...