தாராபுரம் அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்

தாராபுரத்தில், ஒரு ஹூண்டாய் காரும் ஈகோ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். அலங்கியம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள காட்டம்பட்டி பிரிவில் ஒரு ஹூண்டாய் காரும், பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்கள் நிறைந்த ஈகோ வேனும் கொடுமையான மோதலில் சிக்கின.



இந்த விபத்தில் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவா, சூர்யா, மெய்யரசன், ராஜா, கார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...