தாராபுரத்தில், ஒரு ஹூண்டாய் காரும் ஈகோ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். அலங்கியம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள காட்டம்பட்டி பிரிவில் ஒரு ஹூண்டாய் காரும், பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்கள் நிறைந்த ஈகோ வேனும் கொடுமையான மோதலில் சிக்கின.
இந்த விபத்தில் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவா, சூர்யா, மெய்யரசன், ராஜா, கார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.