வனத்துறையினரின் நீண்டநேர போராட்டத்திற்குப் பின் குட்டையில் தவறிவிழுந்த யானை வனத்திற்குள் சென்றது


கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் இருந்தது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பழனி ராஜன் தலைமையிலான வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரனும் இணைந்து யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், பெரிய யானை ஒன்றும் இருந்ததாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வந்ததாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவரால் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.



இருப்பினும், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அந்த யானைக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியின் மூலம் அந்த யானை எழுந்து நிற்கவைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்பட்டது. 

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காயங்களால் உயிரிழக்கும் தருவாயில் இருந்த பெண் யானை மீட்கப்பட்டு ஆரோக்கியமான நிலையில் குட்டி யானையுடன் வனத்திற்குள் சென்ற காட்சி வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...