வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க குருமலை மற்றும் ஈசல்திட்டு மலைவாழ் முடிவு

குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக சார்பில் உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குரு மலை, குழிப்பாட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டு மலை உட்பட பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் இருந்து அவசர தேவைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு குருமலையில் இருந்து காடம்பாறை, அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டிய நிலை உள்ளது.



மேலும் குருமலையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விரைவாக உடுமலை அரசு மருத்துவமனையை அடையலாம். சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை கிராமங்களில் இருந்து உடல்நலம் மற்றும் கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் தற்பொழுது வரை தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

இதற்கிடையில் கடந்த 40 ஆண்டு காலமாகவே அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் மலை கிராம பகுதிகளுக்கு வருகை புரிந்து அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றி தருவதில்லை.

இந்த நிலையில் பாஜக சார்பில் குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...