கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஒரே இடத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம், ஆயிஷா மஹாலின் வலது புறம் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஏப்ரல்.10 ஒரே இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு இன்று ஏப்ரல்.10 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று விட்டு வெளியே வந்த பொழுது, அவ்வழியாக வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி இருவரும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.



ஆயிஷா மஹாலின் வலது புறம் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...