கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஒரே இடத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம், ஆயிஷா மஹாலின் வலது புறம் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஏப்ரல்.10 ஒரே இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு இன்று ஏப்ரல்.10 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று விட்டு வெளியே வந்த பொழுது, அவ்வழியாக வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி இருவரும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.



ஆயிஷா மஹாலின் வலது புறம் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...