வால்பாறையில் மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி..!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.



குறிப்பாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை பகுதிக்கு வருவதால் அனைத்து கட்சியினர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி நேற்று காலை வாட்டர்பால், கருமலை, வால்பாறை, வெள்ளமலை, முடீஸ், சோலையார், கன்னி மேடு சோலையார், சோலையாறு அணை, சேக்கள்முடி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு வால்பாறை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கும் அலுவலகம் கட்டி தருவதாக தெரிவித்தார்.



மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்தவும், வால்பாறை பகுதியில் மாற்று தொழில் கொண்டு வரவும், தொழில் பயிற்சி கல்லூரி கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...