தண்ணீரில் மிதந்து வந்த இறந்த ஆண் சிசுவின் உடலை அடக்கம் செய்த காங்கேயம் தனியார் அமைப்பினர்

காங்கேயத்தை சேர்ந்த‌ தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை அரசு அனுமதி பெற்று சென்னிமலை சாலையில் உள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள பிஏபி கால்வாயில் பிறந்து 3 முதல் 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு உடல் மிதந்து வந்தது. யாருடைய குழந்தை எங்கு இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் இறந்த குழந்தையின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...