தண்ணீரில் மிதந்து வந்த இறந்த ஆண் சிசுவின் உடலை அடக்கம் செய்த காங்கேயம் தனியார் அமைப்பினர்

காங்கேயத்தை சேர்ந்த‌ தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை அரசு அனுமதி பெற்று சென்னிமலை சாலையில் உள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள பிஏபி கால்வாயில் பிறந்து 3 முதல் 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு உடல் மிதந்து வந்தது. யாருடைய குழந்தை எங்கு இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் இறந்த குழந்தையின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...