கோவையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று கல்லூரி விழாவில் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு பேசியுள்ளார்.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பதினேழாவது கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் 04.04.2024 அன்று காலை நடைபெற்றது.



விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு பல்வேறு இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று அறிவுரை வழங்கினர். விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் அவர்கள் பேசும்போது நல்ல கல்வி பெற்று வாழ்வில் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக இக்கல்லூரி எப்போதும் துணை நிற்கும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.

முன்னதாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சீ.ராஜு வரவேற்புரையும், அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கையும் வாசித்தார். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சுமார் 596 பணியாணைகள் முனைவர். சி. சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உங்களைப்போல் உங்கள் பெற்றோர்களோ, முந்தைய தலைமுறையினரோ படித்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் கல்விக்காக அவர்களின் தியாகம் மிகப் பெரியது. உங்கள் எதிர்கால வாழ்க்கை சுலபமானது அல்ல. அந்தச் சவால்களைச் சமாளிக்க இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் துணையோடு ஆயத்தமாகவேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...