கோவையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி மாணவர்கள் 5-வது நாளாக போராட்டம்


கோவையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலை பீளமேடு அருகே மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம்,  அக்கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்வன் என்பவர் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும், இதனை தட்டி கேட்க வேண்டிய கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டி, மாணவ மாணவியர் கடந்த 4 நாட்களாக வகுப்புகள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மீது ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி 5-வது நாளாக  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் போதிய திறமை வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...