திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்கு

சோதனை செய்ய முயன்ற நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியதாக பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முருகானந்தம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் இன்று திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான குறிஞ்சிபுதூர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. இச்சோதனை சாவடி வழியாக காரில் வந்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்தின் காரை அங்கு பணியில் இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மரியாதை குறைவாக பேசியதோடு மட்டும்மல்லாமல், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வாக்கு வாதத்திற்கு இடையே வேட்பாளர் வந்த காரை சோதனை செய்த பிறகு வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான AP.முருகானந்தத்தின் மீது பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் தேர்தல் பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...