கோவையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி எம்பி ஆகியோர் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளனர்.


கோவை: கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12-4-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தல்-2024, இந்தியா கூட்டணி திமுக கழக‌ கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி,

தேர்தல் பரப்புரை செய்ய‌ உள்ளார்கள்.



அதையொட்டி, கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை‌ அமைச்சர் சு.முத்துசாமி இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், திமுக கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், திமுக கழக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...