தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, கடந்த 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், சில தனியார் மற்றும் பொது அமைப்புகள் நடத்தக்கூடிய உள்ளரங்கு கூட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெறவேண்டும்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கப்பதற்காக தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று, அது தொடர்பாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்ட பின்னரே ஒட்டப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற விவரத்தினை மூன்று நாட்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் அனுமதி பெறாமல் ஒட்டினால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகவே பார்க்கப்படும் என்பதோடு தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...