ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும்  முதியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்தும் முதியவர்களுக்குக்கான இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி, டஸ்க் பார்கில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இம்முகாமில், 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் உடம்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் கண்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கோவையில் உள்ள மோசஸ் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனைக்கு ஹெல்ப் ஏஜ் இந்தியா மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இம்முகாம் இப்பகுதியில் இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இதுபோன்ற இலவச பொது மருத்துவ முகாம் ஹெல்ப் ஏஜ் இந்தியா 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதவி வருகிறது.



இந்த முகாமினை கோவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் டஸ்க் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக்கீம் ஏற்பாடு செய்தார். இதில், வெல்பெர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில துணை செயலாளர் ஆஷிக், டஸ்க் பார்க் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...