கோவையில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் வரும் ஒரு சில வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தற்போது, இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா என்னும் நகரத்திலேயே அதிகப்படியாக 44.1 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.


முன்னதாகவே தென்னிந்தியாவில் அதிகப்படியாக கோவையில் கடந்த 10 நாட்களாக  வெப்பம் சுட்டறித்து வருகிறது. கோவையில் வெள்ளூருக்கு இணையாக 37 டிகிரி செல்சியஸ், மதுரை 29 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி 24 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 33 டிகிரி செல்சியஸ் என வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் தற்போது கோவையில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் என்னும் விற்பனை பிரதிநிதி கூறுகையில், கோவையில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாலை 5 மணியளவில் கூட வெயில் சுட்டறிகிறது. இவ்வருடம் கோவையில் நிலவி வரும் வெயில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது' என்றார்.

இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர் ராம் பிரசாத் கூறுகையில், கோவையில் தற்போது நிலவி வரும் வெப்பம் சென்னையை நினைவுபடுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே கோவையில் இவ்வாறு தட்ப வெப்ப நிலை மாற்றம் அடைந்துள்ளது. சாலை போக்குவரத்தின்போது சிகனல்களில் நிறுத்தத்திற்கான நேரத்தினை குறைத்தால் மக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.

சண்முகசுந்திரம் என்னும் முதியவர் கூறுகையில், இதுபோன்ற வெயில் சுட்டறிகும் காலங்களில் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர செல்லும்  பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்து போகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...