தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை அரசூர் சட்ட வழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இடம் ஏழு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் இடம் பேசவில்லை. இதனால் நீதி கிடைக்க வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் கெத்தல்ரேவ், தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், தொப்பம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டியும் , வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள். இன்று, உங்கள் தேவைக்கு ஓட்டுக் கேட்க மட்டும் வராதே!வராதே! ஓட்டுக் கேட்டு யாரும் ஊருக்குள்ளே வராதே என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு தற்போது பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உப்பாறு பாசன விவசாயிகள் கையில் கருப்புக்கொடி காட்டி அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டவாரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்‌.



இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கோரி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பிரகாஷ் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றார். இதனால் தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை என்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...