வாராந்திர கூட்ட நெரிசல் காரணமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாராந்திர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-சென்னை-கோவை இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்கத்தில் சென்னையில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி பகல் 10.20க்கு புறப்படும் வண்டி எண் 06049 கோயம்பத்தூர் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் இரவு 8.25க்கு கோவை வந்து சேரும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...