வாராந்திர கூட்ட நெரிசல் காரணமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாராந்திர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-சென்னை-கோவை இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்கத்தில் சென்னையில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி பகல் 10.20க்கு புறப்படும் வண்டி எண் 06049 கோயம்பத்தூர் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் இரவு 8.25க்கு கோவை வந்து சேரும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...