கோவை அதிமுக வேட்பாளருக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்..!

நஞ்சுண்டாபுரம் பகுதியில், எம் எல் ஏக்கள் -அம்மன் கே.அர்ஜுனன் மற்றும்  கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: நேற்று, மார்ச் 27, வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கோவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும், அவரவர் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கிஇன்று (மார்ச்.28) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பகுதிக் கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகர், உலகநாதன் மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...