கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல்

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவாகரத்தில், பொறுப்பு பதிவாளர்கள் 2 பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில்முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பதிவாளர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், பேராசிரியர்கள் ஆறு பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர், சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் பணிபுரியும் நான்கு பேர் மீது கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...