கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல்

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவாகரத்தில், பொறுப்பு பதிவாளர்கள் 2 பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில்முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பதிவாளர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், பேராசிரியர்கள் ஆறு பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர், சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் பணிபுரியும் நான்கு பேர் மீது கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...