கோவையில் கிறிஸ்துவர்களுக்கு புனித வாரத்தை தொடங்கி வைத்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூறும் புனித வாரம் தொடங்கியது.



Coimbatore: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூறும் புனித வாரத்தின் தொடக்கமாக, மார்ச் 24 ஆம் தேதி கோவையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. பிப்ரவரி 14 தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ரவி இன்பசிங், உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர், சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு "ஓசன்னா ஓசன்னா" என்று பாடியபடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சேர்ந்து ஊர்வலமாக சென்றனர். ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்த இந்த ஊர்வலம், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஊர்வலம் முடிந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுவதால், இந்த நாட்களில் இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாட கிறிஸ்தவ சமூகம் தயாராகிறது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...