நாடாளுமன்ற தேர்தல்; கோவை தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜ்குமார் அறிமுக கூட்டம்..!

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த கருத்துரை வழங்கினர்.


கோவை: கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹால் வளாகத்தில் கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் கல்பனா, கோவை மக்களவை தொகுதி சிபிஎம் எம்.பி., நடராஜன் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது குறித்த கருத்துரை வழங்கினர்.

இதில் அமைச்சர் முத்துசாமி உரையாற்றிய போது, அமைச்சர் ராஜா உயரத்திற்கு கோவை மக்களவை தொகுதியின் வெற்றி இருக்கும். வேட்பாளருக்கு வெறுமனே கும்பிடு மட்டும் தான் போடுவார்கள் என நினைத்தேன்.

ஆனால், கூட்டணி தலைவர்கள் இணைந்து கையை உயர்த்தியது வெற்றியை உறுதி அளித்தது. குழுக்கள் வீடு வீடாக சந்திப்பது தான் வெற்றியை தரும், வாக்குகளை சேகரிக்க வேண்டும்

மக்களை தினந்தோறும் சந்தித்து 5 நிமிடங்கள் பார்த்தால் தான் வெற்றியை கொடுக்கும்

செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்தார், இன்றும் அவர் கோவையை பற்றி நினைத்து வருவார்,

திமுக உட்பட கூட்டணி தொண்டர்கள் மீறி எதையும் செய்ய முடியாது என என்னால் நிச்சயமாக உணர்ந்து உள்ளோம்.



பொள்ளாச்சியில் முதல்வரின் கருத்துக்கு எதிர்த்தரப்பினருக்கு பயம் வந்தது. பயம் இருப்பதால் தான் நம் ஊரையே சுற்றி சுற்றி வருகின்றனர். எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், நாம் தான் 40 லும் வெற்றி பெறுவோம்

வீடு வீடாக தாய்மார்களை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது, அந்த வாக்கு நமக்கு கிடைக்காது என்றால் 5 முறையாவது மீண்டும் மீண்டும் சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும்.

12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வருகிற 12ஆம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது.

சிறு சிறு வேலைகளை எங்கேயோ நடப்பதை நியாபகம் வைத்து செயல்படுத்தும் முதல்வர் இதுவரை இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வேலையையும் பார்த்து வருகிறார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் நாம் தவற விட்டிருக்கலாம். ஆனால், முதல் நிகழ்ச்சி என்பது வாக்களிக்காதவர்கள் என யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் உழைக்க நினைக்கிறேன் என முதல் கூட்டத்தை கோவையில் நடத்தினார்.

திமுக வெற்றி பெற்றதால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும்

எல்லாரும் கோவை மண்டலம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் திமுகவிற்கு முதல் வெற்றி கோவையிலிருந்து வர முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...